Sunday, January 16, 2011

ஏற்பது இகழ்ச்சி

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இனி தமிழ்நாட்டின் அடுத்த திருவிழா தேர்தல்தான். இப்போதே கருணாநிதியின் இலவசங்கள் குறித்த அறிவிப்புகள் குவியத்துவங்கிவிட்டன - 1.75லட்சம் கோடியைச் செலவழிக்க வேண்டாமா? இதில் ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்ற மொக்கை அறிவிப்பு வேறு. புல்லரிக்குது போங்க. சென்னையின் பெரும்பாலான ஏரியாக்களில் TV இலவச Door delivvery. நீங்கள் இதைப் பெற்றுக்கொள்வதற்கு எங்கும் போய் வரிசையில் காத்திருக்க வேண்டாம். சில மாதங்களுக்கு முன் இதைப்பெற்றுக்கொள்ள நீங்கள் அருகாமையில் உள்ள ரேஷன் கடைக்கு செல்ல நேர்ந்திருக்கும். வேளச்சேரியில் இந்த இலவச தொலைக்காட்சியைப் பெற்றுக் கொள்ள Ford Ikon , Santro க்களில் வந்திருந்தார்களாம் மக்கள் (நன்றி - டைம்ஸ் ஆஃப் இந்தியா). நீங்கள் எதற்கு இதை வாங்குகிறீர்கள் என்று கேட்டதற்கு என் வீட்டில் வேலை செய்பவருக்குக் கொடுக்க என்றார்களாம். இப்படிப்பட்ட செய்திகளைப் படிக்கவும், கேட்கவும் நேர்ந்த சூழ்நிலையில் தினமலரின் ஒரு செய்தி என்னை மிகவும் கவர்ந்தது. செய்தி இதுதான். திருச்சியைச் சேர்ந்த ஒரு விவசாயி தனக்கு அளிக்கப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டியைக் கலெக்டர் ஆஃபிஸில் திருப்பி அளித்தார். அதனோடு அவர் ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார். கடிதத்தின் சாராம்சம் இது - முதல்வர் அவர்களுக்கு மிக்க நன்றி. ஆனால் எங்களுக்கு இலவசங்கள் எதுவும் தேவையில்லை. இதற்கு பதிலாக எங்கள் பகுதியில் தடையில்லாத மின்சாரம் கிடைக்க வழி செய்தும், பாசன முறைகளில் புதுமை புகுத்த பயிற்சியளித்தும் விளைச்சலைப் பெருக்க வழி செய்து கொடுங்கள். அப்படி நீங்கள் செய்யும் போது இவற்றையெல்லாம் நாங்கள் எங்கள் சுயசம்பாத்தியத்தில் பெற்றுக்கொள்வோம். இந்த தொலைக்காட்சியை என் அன்புப்பரிசாக நான் முதல்வருக்கு அளிக்கிறேன்.

நான் தமிளன்டா என்று மேடைகளில் முழங்கும் சிவப்புக்கண் தெலுங்கர்கள், தமிழ் தான் என்னை வாழ வைத்தது என்று சொல்லிவிட்டு அனைத்து முதலீடுகளையும் தம் சொந்த மாநிலங்களில் செய்யும் கன்னடர்களையும் பார்த்து சலித்த எனக்கு இந்த தமிழனி்னஃ செய்கை மிகுந்த பெருமிதத்தை தருகிறது. தன்னிறைவே மெய் நிறைவு. ஏற்பது எவ்வகையிலும் இகழ்ச்சியே. நாம் கொடுப்பவர்களாய் இருப்போம், பெறுபவர்களாய் அல்ல. என் பாத்திரம் நிரம்பி வழியும். அதிலிருந்து நான் எல்லோருக்கும் கொடுப்பேன் என்பதே நம் மனநிலையாய் இருக்கட்டும்.

இதனை எழுதும்போது சென்ற வாரம் நடந்த நிகழ்ச்சி ஒன்று நினைவில் வருகிறது. என் தோழியின் வீட்டிறக்கு செல்ல வேண்டியிருந்தது. வாசுவோடு வண்டியில் சென்றேன். என் ஹேண்டஃ பேகை வண்டியின் முன் பகுதியில் தொங்கவிட்டிருந்தேன். நான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் பையை எடுத்துக்கொள்ள முன்னால் வந்து பார்த்தால் பையைக் காணவில்லை. எங்கே விழுந்த்தென்று நானும் கவனிக்கவில்லை, வாசுவுக்கும் தெரியவில்லை. என்ன செய்வதென்று விளங்கவில்லை. வாசு ATM ல் பணம் எடுத்துக்கொடுத்துவிட்டு, எனக்கு திரும்பி்பபோய் தேடிப்பார்க்க டைம் இல்லை. ஆஃபிஸிற்கு லேட்டாகிவிட்டது. அப்படியே நாம் தேடினாலும் கிடைப்பதற்கான பாஸிபிலிட்டி ரொம்ப கம்மி. நீ ஃப்ரண்டு வீட்டுக்குப் போய்ட்டு வா. அப்புறம் பாத்துக்கலாம் என்றார். அவர் சொல்வதும் சரிதான். தொலைந்த பை கிடைக்கவா போகிறது என்று நினைத்து பேசாமல் friendஐப் பார்க்கச் சென்றுவிட்டேன். திடீரென்று வாசு என் friend நம்பருக்கு phone செய்து (என் phone பையோடு சென்றுவிட்டது) உன் நம்பருக்கு call பண்ணேன். ஒரு அம்மா எடுத்தாங்க. அட்ரஸ் கொடுத்தாங்க. அங்க போய் உன் பைய வாங்கிக்குவியாம் என்றார். இதெல்லாம் நம்ம சிங்காரச்சென்னையில் சாத்தியமா என்றே புரியவில்லை. ப்ரேமா (என் ப்ரெண்ட்), ரமேஷ் அண்ணன்(ப்ரேமாவின் அண்ணன், எனக்கும் தான் - தனியால்லாம் போக வேண்டாம்மா. எவ்வளவு தூரம் நம்பலாம்னு தெரியல) நான் எல்லோரும் அண்ணனின் காரில் அந்த முகவரிக்குச் சென்று பார்த்தோம். ஒரு ஒண்டிக்குடித்தன வீடு. ஒரு அம்மா வந்து பையைக் கொடுத்தார்கள். வீட்டில் வேறு யாரும் இல்லை. வீட்டுக்கார்ரை (40 வயது) ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்களாம் heart operationக்கு. பிள்ளைகள் அவருக்குத் துணைக்கிருக்கிறார்களாம். வீட்டுக்காரர் டீக்கடையில் வேலை பார்க்கிறாராம். ஒரு நாள் சம்பளம் 120 ரூபாயாம். 3.5 லட்சம் கடன் வாங்கி ஆபரேஸன் செய்திருக்கிறார்களாம். என் HideSign bag, E Series phone, பையிலிருந்த சில ஆயிரங்கள் இவற்றை அவர் வைத்துக்கொண்டிருந்தால் நிச்சயம் பல ஆயிரங்கள் அவருக்கு கிடைத்திருக்கும். சில நாட்களை அவர் சிரமமின்றி கழித்திருக்கலாம். ஆனாலும் அவர் சொல்கிறார் - அடுத்தவங்க பொருளுக்கு ஆசப்படலாமா? அது தப்புமா. அவர் தான் உண்மையான, தன்மானத் தமிழன். மந்திரியாயிருந்த ராசாக்களும், அவர்களின் பரிவாரங்களும் என் நினைவில் ஆடினர்.
நண்பர்களே நாம் என்றைக்கும் எதையும் மற்றவர்க்கு கொடுப்பவர்களாய், எவ்விதத்திலும் மற்றவர்க்கு உதவுபவராய், ஈவதில் உவகையுள்ளவர்களாய் இருக்க நமக்கு கடவுள் அருள்பாலிக்க வேண்டுகிறேன்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes