Wednesday, August 31, 2011

ஆசிரியர்கள் உலகின் 5 ரகசியங்கள்

மாணவப்பெருமக்களே, ஆசிரியர்கள் உங்களுக்கு இதுவரை சொல்லியிராத இனிமேலும் சொல்லப்போகாத ரகசியங்கள் பின் வருபவை:




  • ஆசிரியர்களுக்கு நீங்கள் nick name வைப்பதைப் போல அவர்களும் உங்களுக்கு nickname வைப்பதுண்டு. அப்பெயரை வைத்து தான் நீங்கள் departmentல் அழைக்கப்படுவீர்கள். நீங்கள் முன்னாள் மாணவராய் இருந்தால் உங்கள் டீச்சரிடம் கேட்டுப்பாருங்கள் உங்கள் பெயர் என்னவென்று.


  • Bit அடிக்கும் மாணவனைப் பிடித்த பின்பு எங்களுக்கும் (அதாவது ஆசிரியர்களுக்கும்) பயமாக இருக்கும் - பையன் பொன்னம்பலம் சைசில் இருப்பான். பத்திரமாக வீடு போய் சேர வேண்டுமே :)


  • வகுப்பறையில் தூங்கும் மாணவனை அந்நேரம் திட்டினாலும் மனதிற்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டுதான் இருப்போம். departmentன் அன்றைய காமெடி பீஸ் அவன்தான்


  • உங்களிடம் Take a paper - surprise test என்று சொன்னால் நிச்சயம் எங்கள் வீட்டிற்கு முந்தின நாள் guest வந்தார்கள். அதனால் prepare பண்ணவில்லை என்று அர்த்தம்.


  • நீங்கள் எப்படி 1 hr க்ளாஸைத் தள்ள கஷ்டப்படுகிறீர்களோ அதேபோல் நாங்களும் 3 hrs exam supervisionஐத் தள்ளக் கஷ்டப்படுவோம். அதனால்தான் பொறுப்பாக நீங்கள் எழுதும் answerஐப் படித்துக்கொண்டிருப்போம். (அது ஏன் நாங்க உங்க பேப்பர படிக்க ஆரம்பிச்சவுடனே நீங்க எழுதுறத நிறுத்திட்டு எங்களப் பாக்குறீங்க - அப்புறம் எப்படித்தான் எங்களுக்கு பொழுது போறதாம்?)

Sunday, August 28, 2011

ஒவ்வொரு ஃபிரெண்டும் தேவை

நாம் மனிதர்களையும் அவர்கள்பால் நாம் கொள்ளும் உறவுகளையும் கையாள்வதில் என்றும் உணர்ச்சிவயப்பட்டவர்களாகவே இருக்கிறோம். பெண் என்னும் தனி மனுஷியை நமக்கு ஒன்று தெய்வமாக சித்தரிக்கவேண்டும் அல்லது பேயாக கேவலப்படுத்த வேண்டும். கணவனைக் கண்கண்ட தெய்வம் என்று கொண்டாடும் - தெய்வம் தொழாள் கொழுநன் தொழுவாள் - டைப்பாக இருக்கவேண்டும். ஆசிரியர்களை mr அல்லது mrs என்ற அடைமொழியோடு பெயரிட்டு கூப்பிடுவதை நம்மால் நினைத்தே பார்க்க முடியாது. அதே போல் நண்பர்களையும், நட்பையும் ஒரு pedestalல் கொண்டு வைத்தபின் தான் நாம் ஓய்கிறோம். friendshipக்காக என்ன வேணாலும் செய்வேன் என்று பேசுபவரை திரைப்படத்தில், வகுப்பறையில், ஆஃபிஸில் எங்கும் காணலாம்.





போன வாரம் ஸ்கூலில் இருந்து வீடு திரும்பிய என் மகளின் கைகளில் காயம். என்னவென்று விசாரித்ததில் ஹரிணி கிள்ளிவிட்டதாகச் சொன்னாள். நீ miss கிட்ட சொல்லி வேற place போக வேண்டியது தான என்றேன். ஹரிணி என் friend மா என்றாள். உன்ன மாதிரியே இருக்கிறா உன் மகளும் (எவ்வளவு அடிச்சாலும் தாங்குறா. இவ ரொம்ப நல்லவ) என்றார் வாசு. நண்பர்களால் நாம் காயமடைவதும், மோசமான ஏமாற்றங்களுக்கு உள்ளாவதும், அதை நம் நெருங்கிய உறவினர் criticise பண்ணுவதும் எல்லா வீடுகளிலும் நடப்பது. நீதான் friend friendங்கிற. அவ செஞ்ச வேலையப் பாத்தியா என்ற கேள்வியை எதிர்கொள்ளாதவர்களே இருக்க முடியாது. இது எதை நிருபிக்கிறது என்றால் நண்பர்கள் மோசமான மனிதர்கள் என்பதையல்ல - நண்பர்களும் மனிதர்களே என்பதை. நண்பர்கள் சில வேளைகளில் சுயநலத்தோடு நடந்து கொண்டாலும், காயப்படுத்தினாலும் நிச்சயம் அவர்களை நம் வாழ்க்கையிலிருந்து முற்றுமாக அகற்றிவிட முடியாது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. நட்பை பாதுகாத்துக் கொள்ள சில டிப்ஸ் தர விரும்புகிறேன்.















  1. பிரத்தியேகமானது எதையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். துன்பத்தைப் பகிர்ந்து கொண்டால் பாதியாகும், இன்பத்தைப் பகிர்ந்து கொண்டால் இரட்டிப்பாகும் என்பதும் சுத்த ஹம்பக். அனைவருக்கும் பொதுவான பிரச்சினைகளை மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள். உதாரணமாக பெற்றோரின் மரணம் தரும் வலியை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் உடல் பருமனால் அவதியுறும் தோழியின் மனவலியை என்னால் ஒரு அளவுக்கு மேல் புரிந்து கொள்ளவே முடியாது. whats the big deal என்பதே என் reaction ஆக இருக்கும். எனவே மனம் வருந்தி நீங்கள் பகிர்ந்து கொள்ளும் விஷயம் கிண்டலாக ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் உங்கள் மீது பிரயோகிக்கப்படும்போது மனவலி ஏற்படும். ஏனெனில் அப்பிரச்சினை இல்லாத உங்கள் தோழியால் அதைப்புரிந்து கொள்ள இயலாது. அதே போல் பொதுவான சந்தோஷங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ளுங்கள். அன்னா ஹசாரே உண்ணாவிரதம் சக்ஸஸ் என்று கூறி சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள். உங்கள் பிரத்தியேக சந்தோஷங்களை அல்ல. ஏனெனில் மனித மனம் நுண்ணிய இழைகளால் ஆனது. அந்த இழைகளை அறுத்து மனத்தைச் சிதைக்க சிறு சலனமும் போதும். உங்களின் வெற்றியைக் கேட்கும் உங்கள் நண்பனின் மனதில் தோன்றும் சிறு ஏக்கமும் (அந்த வெற்றி அவர்களுக்கும் கிடைத்திராத பட்சத்தில்) பொறாமைத்தீயைப் பற்ற வைத்து நட்பை பஞ்சராக்கும். இவைகளால் நம் நண்பர்கள் கெட்டவர்கள் என்று புரிந்து கொள்வது அரைவேக்காட்டுத்தனம். நம் நண்பர்களும் - உயர்ந்த லட்சியங்களும், கீழான இச்சைகளும், சகமனிதருக்கு உதவவேண்டும் என்ற எண்ணமும், நான் மட்டுமே உயரவேண்டும் என்ற தன்னலமும் - கலந்து கொண்ட நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களே.










  2. எதன் பொருட்டும் கேட்கப்படாமல் அட்வைஸ் கொடுக்காதீர்கள். இது 10 வருட நட்பையும் 10 நிமிடத்தில் நொறுக்கி அள்ளிவிடும் வல்லமை படைத்தது. என் 12 வருட தோழியின் காதலனுக்கு accident. வீட்டில் படுக்கையிலிருக்கிறார். அவர்களுக்கு கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. தோழி வேறு ஊரில் இருந்தாள். accident விஷயம் தெரிந்தவுடன் அவள் அவர் வீட்டிற்கு சென்று தங்கி அவருக்கு உதவி செய்ய விருப்பப்பட்டாள். நான் அந்த ஊர்ல ஒரு மாதிரியா பேசுவாங்க. பாத்துப்போ என்றேன். (அவள் என்னிடம் ஐடியா கேட்கவேயில்லை. நானாத்தான் கொடுத்தேன்). அன்றோடு என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டாள். திருமணத்திற்கு பத்திரிககை கூடத்தரவில்லை. கேட்கப்படாமல் ஐடியாவோ அட்வைஸோ தரவே தராதீர்கள். அவரவர் வாழ்க்கையை நடத்திச்செல்ல அவரவருக்குத்தெரியும்.



இவற்றால் உணரப்படும் நீதி: எல்லாவற்றையும் பகி்ர்ந்து கொள்ளாதீர்கள், கேட்கப்படாமல் அட்வைஸ் தராதீர்கள். ஏனெனில் ஒவ்வொரு ஃபிரெண்டும் நிச்சயம் தேவை நண்பர்களே

Monday, August 8, 2011

டப்பர்வேர் தோழிகள் ??!!

கல்லூரிப்பருவம் முடிந்த பின்னர் திருமணமானவுடன் தோழிகளோடு செலவிட பெண்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. திருமணமான முதல் வருடம் தம்பதியருக்குள் ஒருவரின் குறை மற்றவருக்குத் தெரிவதில்லை. எனவே முதல் வருடம் இனிதே கழிகிறது. அடுத்த 3 வருடங்கள் ஒரே தலை போகிற சண்டை (ஒருவரை ஒருவர் புரிஞ்சுக்கிறோமாம் ;) ). நீங்க ஏன் உங்க அம்மாக்கிட்ட அப்படி சொன்னீங்க? நீ மட்டும் அப்டி செய்யலாமா - இத்யாதிகள். அடுத்து ஒரு ஸ்டேஜ் - வாழ்க்கைத்துணை செய்யும் ஏதோ ஒரு செயல் மனவருத்தத்தைத் தருகிறது - ஆமா சொல்லி சண்ட போட்டானாப்ல என்ன ஆயிரப்போகுது என்ற மனப்பக்குவமும், தெளிவும் ஏற்பட்டுவிடும் ;)பிள்ளைகளும் பள்ளிக்குச் செல்லத் துவங்கிவிடுவர். இந்த இடத்தில் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. கல்லூரித் தோழிகளின் நினைவு வருகிறது. இச்சமயத்தில் அக்கம்பக்கம் யாராவது நம்மோடு பழகமாட்டார்களா? ஏதாவது ப்ரண்ட் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது.

இப்படி ஒரு ஸ்டேஜில் நான் இருந்தபோது ஒரு நாள் என் மகளை அபாகஸ் க்ளாஸ் முடித்து என் அம்மா கூப்பிட்டு வநுத பின் ஒரு விஷயத்தைச் சொன்னார். சன் ஷேட் அப்பார்ட்மென்ட்ஸில் (எங்க வீட்டுக்கு 2 வீடு தள்ளி) ஒருத்தங்க இருக்காங்க. டப்பர்வேர் சாமான்லாம் விக்கிறாங்களாம். வாங்குறியான்னு கேட்டாங்க. அவங்க வீட்டுக்கு வரச்சொன்னாங்க - என்றார். நானும் பழைய டப்பாக்களைத் தூக்கிப்போட்டுவிட்டு புது டப்பாக்கள் வாங்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அவர்கள் வீட்டுக்கு போய்தான் பார்ப்போமே என்று சென்றேன் (தயக்கத்துடன்தான்). அங்கே எனக்கு தடபுடல் வரவேற்பு. மிக இனிமையாக பேசினார் அப்பெண்மணி. குழந்தைகளின் படிப்பு, பள்ளிகளின் தரம், ஏரியாவில் ரியல் எஸ்டேட் நிலவரம் என்று பல விஷயங்களை டிஸ்கஸ் செய்தோம். நேரம் போனதே தெரியவில்லை. கேட்டலாக் காண்பித்தார். நான் கேட்ட சில ரக டப்பாக்கள ஸ்டாக் இல்லை. 2 எண்ணை ஜார்கள், ஒரு பீலர் வாங்கிக்கொண்டேன். கிட்டத்தட்ட ரூ.1800 பில். மற்ற சாமான்கள் ஸ்டாக் வய்தவுடன் தெரிவிப்பதாகச் சொன்னார். சாப்பிட்டுத்தான் போகவேண்டுமென்று ஒரே அன்புத்தொல்லை. அடுத்தமுறை பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வரவேண்டுமென்றார். எனக்கும் பிள்ளைகள் எந்நேரமும் வீட்டிற்குள்ளேயே கிடக்கின்றார்களே. நல்ல விளையாட்டுத்துணை கிடைத்திருக்கிறார்கள் என்று மகிழ்ச்சி. ஒரு வாரமாக அவர்கள் வீட்டுக்கு என் பிள்ளைகளும் எங்கள் வீட்டுக்கு அவர்கள் பிள்ளைகளும் வந்து ஒரே குதூகலம் தான். டிவி கம்ப்யூட்டர் தான் விளையாட்டுத்தோழர்கள் என்று எண்ணியிருந்த குழந்தைகளுக்கு ஒரு புதிய உலகம் கண்முன் விரிந்த்து. everything went smooth. meanwhile நான் என் சுமார் 18 வருடத்தோழி மோனிக்கு போன் பண்ணி கிச்சன் முழுமைக்கும் டப்பர்வேர் டப்பாக்கள் வாங்கவிருப்பதைச் சொன்னேன். மாலா ப்ளாஸ்டிக்கில் ஏன் அவ்வளவு காசு போடுகிறாய்? சாதா ப்ளாஸ்டிக்குக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருக்காது. ஒரே வருடத்தில் இதுவும் பழசாக ஆகிவிடும் என்றாள். யோசித்துப் பார்த்ததில் அதுவே சரியென்று பட்டது. எனவே டப்பர்வேர் தோழியிடம் மற்றவை வேண்டாமென்று சொல்லிவிட்டு தோசை மாவு டப்பா ஒன்று மட்டும் வாங்கிக்கொண்டேன்.

அன்று மாலை - அம்மா ஷிவானி (புதுத்தோழியின் மகள்) அக்கா வருவாங்க. பேப்பர்ல கேமரா பண்ண சொல்லித்தருவாங்க - என்று என் பிள்ளைகள் வெய்ட் பண்ணிக்கொண்டிருந்தார்கள். அவள் அன்று மட்டுமல்ல பின் என்றுமே வரவில்லை. பிள்ளைகள் மறுபடியும் டிவிக்கும் கம்ப்யூட்டருக்கும் பழகிக்கொண்டார்கள். நான் தான் டப்பர்வேர் வாங்கியிருக்கலாமோ என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். :(

Monday, August 1, 2011

ரியலிசப் படங்கள்

நீண்ட நாட்களுக்குப்பின் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. தற்சமய ட்ரெண்டான ரியலிச படங்களைப் பற்றி நான் நினைப்பதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அங்காடித்தெரு, கற்றது தமிழ், நந்தலாலா, உன்னைப்போல் ஒருவன், தெய்வத்திருமகள் - இந்தப்படங்களின் க்ளிப்பிங்சைப் பார்க்கும் போதே மனதை ஒரு பதட்டம் ஆக்கிரமிக்கிறது. இவற்றின் இயக்குனர்கள் ஒரே குரலில் சொல்லும் செய்தி - உண்மை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் இப்படத்தை எடுத்தேன். இவர்கள் சொல்வது நிச்சயம் சரிதான். ஒரு முறை சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தோம் (இனிமேல் ஏழேழு ஜென்மத்துக்கும் அங்கு செல்ல மாட்டேன், அனைத்துப் பொருட்களையும் இலவசமாகக் கொடுத்தாலும் கூட). வழக்கம் போல் என் மகளுக்கு பாத்ரூம் வந்துவிட்டது. அங்கு இருந்த லேடீஸ் டாய்லெட் - தனியாக கதவுடன் இருக்கக்கூடியவை 6 இருந்திருக்கலாம் மற்றவை வெட்டவெளி. உள்ளே ஒரு பெருங்கூட்டம். தனி டாய்லெட்டுக்கு காத்திருப்பதெல்லாம் நிச்சயம் கஷ்டம். தள்ளிக்கோங்க ப்ளீஸ் அவசரம் என்ற ஒரு சிறு வயது சேல்ஸ் பெண், அங்கு யாரிருக்கிறார்? பக்கத்திலிருக்கின்றனரா, தூரத்திலிருக்கிறாரா என்பதையெல்லாம் பார்க்காமல் என் காலுக்கு மிக அருகிலேயே அமர்ந்து விட்டார். நாமாக ஒதுங்கிக்கொள்ள வேண்டியதுதான். எனக்கு கண்கள் தளும்பிவிட்டன. ஒரு சின்னஞ்சிறு பெண் பக்கத்திலிருக்கும் யாரையும் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல் இயற்கை உபாதையைத் தணித்துகொள்வது எனக்கு பரிதாபமாக இருந்தது. என்ன ஒரு மோசமான வேலை பார்க்கும் சூழல்?

நான் சொல்ல வருவது இதைத்தான் - நேரிலேயே ஏற்கனவே ஜீரணிக்க முடியாத, நம்ப முடியாத பல விஷயங்களைப் பார்க்கிறோம், கேட்கிறோம். இவை நம்மை ஒரு விதமான குற்றமனப்பான்மைக்கும், மனச்சோர்வுக்கும் ஆளாக்குகின்றன. அவற்றையே மீண்டும் போய் தியேட்டரிலும் பார்க்கும் மனவலிமை நிச்சயம் எனக்கு இல்லை. why should i relive my same stress again in அங்காடித்தெரு?


தமிழ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கம்மி என்பது நமக்குத் தெரியாதா? இப்போதைக்கு எதைப்படித்தாலும் வேலை வாய்ப்பு கம்மிதான். 3 வேளை சாப்பிடவும், தங்க இடமும் இல்லாத எத்தனையோ மாணவர்களை நான் அறிவேன். அம்மாக்கு உடம்பு சரியில்ல. பணத்துக்கு என்ன பண்ணனு தெரியல என்று கண்ணீர் விட்ட மாணவ சகோதரர்களை எனக்குப் பர்சனலாகத் தெரியும். நேற்று டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் வந்த வெவ்வேறு செய்திகள் -




  1. சென்ற வருடம் படிப்பை முடித்த ஒரு ஏரோநாட்டிக் இன்ஜினியர் வேலை கிடைக்காமல் ஏடிஎம்மை கொள்ளை அடிக்க முயற்சி.


  2. BL மாணவன் வழிப்பறி கொள்ளை


  3. கல்லூரி மாணவர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டனர்

இதை ஒரு 3 மணி நேரம் படமாகப் பார்க்க வேண்டுமா?


படம் என்பது அன்றாட வாழ்க்கையின் தீவிரத்தைக் கொஞ்ச நேரமாவது குறைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தலைவர் ரஜினி வேலையில்லாப் பட்டதாரியாக லெதர் பேண்ட், ரேபான் கண்ணாடி போட்டுக்கொண்டு வேலை தேடுவார், கதாநாயகி - உனக்குத்தான் வேறு வேலையில்லையே என்னைக்காதலி- என்று பாடியாடுவார். உடனே தலைவர் சர்ட்டிபிகேட் ஃபைலைத் தூக்கிப்போட்டுவிட்டு காதல் செய்யத்துவங்கிவிடுவார். கட்டாயம் பின்னொரு நாளில் ஏதாவது வேலை கிடைத்துவிடும். நம்பிக்கை தாங்க வாழ்க்கை. படம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். உண்மையிலேயே அந்நாளையப் படங்களுக்காக மனம் ஏங்குகிறது.


அலைகள் ஓய்வதில்லை படத்தில் சிலுவை, பூணூலைத் தூக்கிப்போட்டுவிட்டு போவதோடு படத்தை முடித்து விட்டார். அதற்கு பிறகு அவர்கள் எவ்வளவு கஷ்டப்படார்கள் என்பதை நான் காண்பிக்கிறேன் என்று கிளம்பும் இயக்குன நண்பர்களே - அவர்கள் நாய்படாத பாடு படுவார்கள் என்பதை நாங்கள் அறிவோம் (தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சிவியின் மகளுடைய காதல் கணவன் dowry harassmentக்காக ஜெயிலில், டாக்டர் மகளின் காதல் கணவனை pwdல் வேலை பார்க்கும் என்ஜினியர் ஆள் வைத்துக் கொன்றார் etc etc etc...................................). இந்தப்பாடுகளைப் பக்கத்து வீட்டில், எதிர்த்த வீட்டில், உடன் வேலை பார்ப்பவர்களிடத்தில் தினமும் பார்க்கிறோம். And they lived HAPPILY everafter என்பதை திரைப்படத்திலாவது பார்க்கவே நாங்கள் விரும்புகிறோம்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes