Saturday, March 31, 2012

அபிராமி மெகா மால் - ஒரு ரெவ்யூ

குழந்தைகளுக்குப் பள்ளி விடுமுறை விட்டாயிற்று. எங்கயாவது கூட்டிட்டுப் போங்க என்ற பிள்ளைகளின் நச்சு ஆரம்பித்திருக்கும். சென்னையில் சின்ன பிள்ளைகளுக்கு ஏற்ற இடம் என்று பார்த்தால் - பீச், ஜூ, கிண்டி ஸ்நேக் பார்க் - இவை தான் (வேறு ஏதாவது இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள் நண்பர்களே). இப்போது அந்த லிஸ்ட்டில் முக்கிய இடம் பிடித்திருப்பது அபிராமி மெகாமால். எப்படியிருக்கிறது இது? கொடுக்கப்படும் விளம்பரம் வொர்த்தி தானா? பார்ப்போம்.
பிள்ளைகளுக்கு ஒரு 3டி ஷோ இருக்கிறது. அதற்கு நுழைவு கட்டணம் ரூ.120. ஷோ 20 நிமிடங்கள் நடக்கிறது. ரூ.120 கட்டணம் வொர்த்தி என்று தான் நினைக்கிறேன்.ஷோவைப் பிள்ளைகள் மிகவும் ரசித்தனர்.

மேஜர் அட்ராக்ஷனாக அவர்கள் பிரமோட் செய்வது ஸ்நோவேர்ல்ட். நாங்கள் போன நேரம் ரெனவேஷனுக்காக அது பூட்டப்பட்டிருந்தது. ஆனால் இதைப்பற்றிய எந்த அறிவிப்பும் இவர்களின் விளம்பரங்களில் இல்லை. பிள்ளைகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். சரி முன்னால் நின்று ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்று பார்த்தால் வேகமாக ஒருவர் வந்து போட்டோலாம் எடுக்கக்கூடாதுங்க என்று சொல்லிவிட்டுச் சென்றார். இதே ஆர்டர்தான் கிஸ்ஸிங் கார்ஸ் இடத்திலும். ஏன் புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கிறார்கள் என்று புரியவில்லை. அப்படி பூட்டி வைத்துக்கொள்ளும் படி extra ordinary ஆக எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்புறம் ஏன் இந்த பில்ட் அப்???

அக்வேரியம் என்று ஒன்று வைத்து ரூ.30 ஒரு ஆளுக்கு வசூலிக்கிறார்கள். நிச்சயம் its not worthy. ஒரு ப்ளே ஏரியா இருக்கிறது. இங்கும் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை - ஸ்ஸ் அப்பா முடியல. ஒரேயொரு அன்வான்டேஜ் - இங்கிருக்கும் ப்ளே மெஷின்களில் வின்னிங் டிக்கெட் நிறைய வருகிறது. அனேகமாக எல்லா பிள்ளைகளுமே எளிதாக ஏதாவது ஒரு சிறிய பரிசை வெல்கிறார்கள்.

தியேட்டர்கள் ஒவ்வொன்றும் ஒரு தீம் என்றார்கள். எங்களால் அனைத்தையும் விசிட் செய்ய முடியவில்லை. அதனால் அதைப்பற்றி அதிகம் கூற முடியவில்லை.

இன்னொரு விஷயம் - இங்கு புட் கோர்ட்டில் நிறைய ஸ்டால்களில் உணவு நன்றாக இருக்கிறது. 3டி ஷோவைத் தவிர வேறெதுவும் தனித்துவமிக்கதாக இல்லை. ஒரு வேளை ஸ்னோ வேர்ல்டு திறந்திருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கலாம். மற்றபடி வேறு அனைத்துமே சிட்டி சென்டர், எக்ஸ்பிரஸ் அவென்யு போன்ற மற்ற மால்களில் இருப்பவைதான்.

Monday, March 19, 2012

பேஸ்புக் பின்விளைவுகள்

பேஸ்புக் சோஷியல் நெட்வொர்க்கிங் தளத்தில் இன்றைய தேதிக்கு நமக்குத் தெரிந்த 4 பேரில் கட்டாயம் 3 பேர் அக்கவுண்ட் வைத்திருக்கிறார்கள். அதை ரெகுலராக அப்டேட்டும் செய்கிறார்கள். ஒரு அமெரிக்கத் தன்னார்வ நிறுவனம் சமீபத்தில் நடத்திய சர்வேயின்படி (நன்றி-டைம்ஸ் ஆப் இண்டியா), ஒரு வாரத்தில் 5 மணி நேரத்துக்கும் அதிகமாக பேஸ்புக்கில் இருப்பவர்கள், தங்களை விட தங்கள் நண்பர்களின் வாழ்க்கை மிகவும் சுவாரசியமாக இருப்பதாகக் கருதுகிறார்களாம். மேலும் மற்ற அனைவரும் பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக நினைக்கிறார்களாம்.

இந்த சர்வே முடிவுகளுக்கு நாம் அமெரிக்கா வரை போகத்தேவையில்லை. நாமே சில நேரங்களில் இப்படியொரு நினைப்பிற்கு ஆட்பட்டிருப்போம். கணவரின் தோளில் தலை சாய்த்தபடி சிரிக்கும் தோழியின் புகைப்படத்தைப் பார்க்கும்போது, தவிர்க்க முடியாமல் அன்று நம் வீட்டில் நடந்த அல்ப காரணத்துக்காக நடந்த சண்டை நினைவில் உறுத்தும் (ஆரம்பிச்சுட்டாங்கடா என்ற பிள்ளைகளின் கமெண்ட்ஸோடு ;) ). உடனே மற்ற அனைத்து தம்பதிகளும் எப்போதும் சிரித்துக்கொண்டு காக்க காக்க சூர்யா ஜோதிகா போல் இருப்பதுபோல் நினைத்துக்கொள்கிறோம். யார் கண்டார்கள் - தோழி வீட்டில் முந்தைய நாள் என்ன குடுமிப்பிடி சண்டையோ ;)

நடைமுறை உண்மை என்பது தம்பதிகள் சில சமயங்களில் Made for each other, சில சமயங்களில் Mad at each other and not mad(e) for each other. இது தானே அனைத்துக்குடும்பங்களிலும் நடப்பது.

புகைப்படங்கள் பொய்சொல்லும். நமது மிகச்சிறந்த புகைப்படங்களாக நாம் நினைப்பவற்றைத்தான் அப்லோட் செய்கிறோம். எல்லோரும் அப்படித்தான். நாம் நினைப்பது போல் அல்ல - எல்லோர் வாழ்க்கையிலும், நம் வாழ்க்கையில் இருப்பதைப் போன்றே ஏற்றத்தாழ்வுகள் உண்டு. மன நிம்மதிக்கு ஒன்று பேஸ்புக் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுங்கள் அல்லது மேல் சொன்னவற்றை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

Saturday, March 10, 2012

சூர்யா தோல்வி

பெரிய திரை சூப்பர் ஸ்டார்கள் சின்னத்திரையிலும் தலைகாட்டுவது அனைத்து இந்திய மொழித்தொலைக்காட்சிகளிலும் நடக்கும் ஒரு நிகழ்வு. அமிதாப், ஷாருக், சல்மான் முதல் நம் சரத், சூர்யா வரையில் கேம் ஷோக்களில் தலை காட்டிவிட்டனர். இதில் பாலிவுட் நடிகர்களில்அமிதாப், ஷோவை சூப்பர் ஹிட்டாக்கினார். சல்மான் நடத்தும் போதும் டிஆர்பி ரேட்டிங் நன்றாகவே இருந்ததாக சர்வேக்கள் சொல்கின்றன. ஆனால் ஷாருக்கால் டிஆர்பியைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

விஜய் டிவியின் கேம் ஷோவைப் பார்க்கும்போது மிகுந்த அலுப்புத் தட்டுகிறது. டிஆர்பி ரேட்டிங்கும் சரியில்லையாம். ஒரு கேம் ஷோவை சுவாரசியமாக்குவது அதில் கேட்கப்படும் கேள்விகள், ஷோவை நடத்தும் ஹோஸ்ட், பார்வையாளர்களுக்கு ஷோவில் இருக்கும் பங்கு. இவற்றில் அனைத்திலுமே இந்த ஷோ பெயிலியர்தான்.

முதலில் இதில் கேட்கப்படும் கேள்விகளைப் பார்ப்போம் - ராமனின் தாயார் யார்? - பதிலுக்கான சாய்ஸ்களில் ஒன்று சீதா. உறங்கும் நேரம் தனிமை தனிமையே - இந்தப்பாடலில் இடம்பெறும் நகரம் எது? இன்னும் எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் என்று மட்டும் தான் கேட்கவில்லை. பார்வையாளர்களையும், பங்கேற்பவர்களையும் மிகவும் அன்டர் எஸ்டிமேட் செய்கின்றனர். இந்த மாதிரியான அரைவேக்கட்டுத்தனமான கேள்விகள் வெறுப்பேற்றுகின்றன.

அடுத்து ஹோஸ்ட் - சூர்யாவால் இந்த ஷோவைச் சுமக்க முடியவில்லை. He could not carry the show. மிகவும் பரிதாபமாக அந்த சீட்டில் அமர்ந்திருக்கிறார். மேலும் அவரால் ஆடியன்ஸோடு ரிலேட் செய்ய முடியவில்லை. ஹாட்சீட்டில் அமர்ந்திருப்பவரோடு மட்டுமே தொடர்பு கொள்கிறார். நான் சொல்வது உயிரோட்டமுள்ள ஒரு உரையாடலைப் பற்றி. எனவே பார்வையாளர்களால் இந்த ஷோவோடு தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ள முடியவில்லை. மனம் தானாகவே அமிதாப்போடு கம்பேரிஸனில் இறங்கி விடுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நிச்சயம் சூர்யாவுக்கு இந்த ஷோ தோல்வியே. மானிடரி கெய்ன்ஸ் பற்றி நாம் கணக்கெடுத்துக்கொள்ள வேண்டாம்.

Monday, March 5, 2012

நண்பர்களே நமது பிளாகிற்கு லீப்ஸ்டர் விருது



என் இனிய வாசக நண்பர்களே நமது பிளாகிற்கு லீப்ஸ்டர் விருது வழங்கியிருக்கிறார் நண்பர் கவிப்ரியன். இந்த பிளாகிற்குக் கிடைத்துள்ள இவ்விருது மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. எந்தவொரு வேலைக்கும் கிடைக்கும் அங்கீகாரமே அந்த வேலையைத் தொடர்ந்து செய்வதற்கான ஊக்கத்தை அளிக்கிறது.. இந்த விருது 200க்கும் குறைவான பின்தொடர்பவர்களை உடைய புதிய தளங்களுக்கு அளிக்கப்படுகிறது. என்னுடைய தளத்தையும் வாசித்து அதற்கும் அங்கீகாரம் அளித்த நண்பர் கவிப்ரியனுக்கு நன்றி.

இதற்கு பின் நான் ஏதாவது 5 வலைப்பூக்களுக்கு இந்த விருதை வழங்க வேண்டும். ஒன்று எனக்கு இதை அளித்த கவிப்ரியன் அவர்களின் வலைப்பூவிற்கு. மற்றவை மற்ற வலைப்பூக்களை மேய்ந்து பார்த்தபின் ;).

வாசித்து ஊக்கப்படுத்தும் இனிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

Thursday, March 1, 2012

நடிகர் ஜீவா செய்வதை உங்களால் செய்ய முடியுமா?

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரியின் மகனும், குறிப்பிடக்கூடிய சில நல்ல படங்களில் நடித்தவருமான நடிகர் ஜீவா, விஜய் டி.வி நண்பன் பட புரமோஷன் நிகழ்ச்சியில் சொன்ன ஒரு விஷயம் இது - எனக்கு தற்சமயம் நடிக்கப் பிடித்திருக்கிறது. அதனால் நடிக்கிறேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டுமென்பது என் விருப்பம். இன்னும் சில வருடங்களில் நடிப்பது எனக்கு பிடிக்காமல் போகுமேயானால் நடிப்பை விட்டுவிட்டு எனக்குப் அந்நேரம் பிடித்த தொழிலைச் செய்ய கிளம்பிவிடுவேன்.

இவரது இந்த கருத்து மேம்போக்காக பார்க்கும்போது சாதாரணமாயிருந்தாலும் கொஞ்சம் யோசித்தால் ஜீவா கொடுத்து வைத்தவர் என்றே தோன்றுகிறது. பிடித்த தொழிலைச் செய்வது என்பது பெரும்பாலானோருக்கு வாய்ப்பதில்லை. ஐ.டி துறையிலிருந்து கொண்டு கல்லூரி ஆசிரியராக இருப்பதைப் பற்றி கனவு காண்பவரையும் (சம்பளம் ஒரு தடை - மேலும் பிழைக்கத்தெரியாதவன், திறமையில்லாதவன் என்று பல பெயர்கள் கிடைக்கும்), கல்லூரி ஆசிரியராக இருப்பவர் ஐடி துறைக்குள் செல்ல முடியவில்லையே என்று ஏங்கித்தவிப்பதையும் காண முடிகிறது. உண்மையில் கனவுகளைத் துரத்துவதற்கு மிகுந்த தைரியமும், சாதகமான குடும்பச்சூழலும் கட்டாயம் தேவை.

தி அல்கெமிஸ்ட் என்றொரு அருமையான நாவல். இந்நாவலின் நாயகன் ஒரு இடையன். அவனது காலத்தில் கடை வைத்திருப்பவனுக்குத்தான் மதிப்பு-அவனுக்குத்தான் திருமணத்துக்குப் பெண் கொடுக்கப் பிரியப்படுவார்கள். ஆனால் நம் கதாநாயகன் பயணம் செய்வதிலும், புதிய இடங்களை, நண்பர்களை அடைவதிலும் தணியாத தாகம் உள்ளவன். எனவே ஓரிடத்தில் அமர்ந்து கடை நடத்த அவன் பிரியப்படவில்லை. எனவே எப்போதும் ஏகாந்தமாக அலைந்து திரியக்கூடிய இடையன் தொழிலை அவனது தகப்பனின் விருப்பத்துக்கு மாறாகத் தேர்ந்தெடுக்கிறான். வெண்மேகம் போல் பிரபஞ்சமெங்கும் பயணப்படுகிறான்.அந்நாவலில் ஓரிடத்தில் சொல்கிறார் ஆசிரியர் Paulo Coelho - If you really want something the entire universe conspires to help you achieve that. ஆனாலும் இதன் நடைமுறை சாத்தியம் பற்றி எனக்கு இன்னும் நம்பிக்கையில்லை. லோன் வாங்கிப் படிக்கும் ஒரு மாணவன் குறைந்த சம்பள வேலையே தனக்கு ஆத்ம திருப்தி தருவதாகக் கருதினால் கடனை அடைப்பதும், குடும்ப பாரத்தை ஏற்பதும் எவ்வகையில் சாத்தியம்? எனவே தான் சொல்கிறேன் தான் விரும்பிய தொழிலைச் செய்பவர்கள் பாக்கியவான்கள். ஜீவா அவரே சொல்லிக்கொள்வதுபோல் சில்வர் ஸ்பூனோடு பிறந்தவர். அவருக்குப் பிடித்தால் நடிக்கலாம், பிடிக்காவிட்டால் ஹோட்டல் நடத்தலாம் - புலியைப் பார்த்து பூனைகள் சூடு போட்டுக்கொள்ளக்கூடாது.


 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes