Monday, March 19, 2012

பேஸ்புக் பின்விளைவுகள்

பேஸ்புக் சோஷியல் நெட்வொர்க்கிங் தளத்தில் இன்றைய தேதிக்கு நமக்குத் தெரிந்த 4 பேரில் கட்டாயம் 3 பேர் அக்கவுண்ட் வைத்திருக்கிறார்கள். அதை ரெகுலராக அப்டேட்டும் செய்கிறார்கள். ஒரு அமெரிக்கத் தன்னார்வ நிறுவனம் சமீபத்தில் நடத்திய சர்வேயின்படி (நன்றி-டைம்ஸ் ஆப் இண்டியா), ஒரு வாரத்தில் 5 மணி நேரத்துக்கும் அதிகமாக பேஸ்புக்கில் இருப்பவர்கள், தங்களை விட தங்கள் நண்பர்களின் வாழ்க்கை மிகவும் சுவாரசியமாக இருப்பதாகக் கருதுகிறார்களாம். மேலும் மற்ற அனைவரும் பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக நினைக்கிறார்களாம்.

இந்த சர்வே முடிவுகளுக்கு நாம் அமெரிக்கா வரை போகத்தேவையில்லை. நாமே சில நேரங்களில் இப்படியொரு நினைப்பிற்கு ஆட்பட்டிருப்போம். கணவரின் தோளில் தலை சாய்த்தபடி சிரிக்கும் தோழியின் புகைப்படத்தைப் பார்க்கும்போது, தவிர்க்க முடியாமல் அன்று நம் வீட்டில் நடந்த அல்ப காரணத்துக்காக நடந்த சண்டை நினைவில் உறுத்தும் (ஆரம்பிச்சுட்டாங்கடா என்ற பிள்ளைகளின் கமெண்ட்ஸோடு ;) ). உடனே மற்ற அனைத்து தம்பதிகளும் எப்போதும் சிரித்துக்கொண்டு காக்க காக்க சூர்யா ஜோதிகா போல் இருப்பதுபோல் நினைத்துக்கொள்கிறோம். யார் கண்டார்கள் - தோழி வீட்டில் முந்தைய நாள் என்ன குடுமிப்பிடி சண்டையோ ;)

நடைமுறை உண்மை என்பது தம்பதிகள் சில சமயங்களில் Made for each other, சில சமயங்களில் Mad at each other and not mad(e) for each other. இது தானே அனைத்துக்குடும்பங்களிலும் நடப்பது.

புகைப்படங்கள் பொய்சொல்லும். நமது மிகச்சிறந்த புகைப்படங்களாக நாம் நினைப்பவற்றைத்தான் அப்லோட் செய்கிறோம். எல்லோரும் அப்படித்தான். நாம் நினைப்பது போல் அல்ல - எல்லோர் வாழ்க்கையிலும், நம் வாழ்க்கையில் இருப்பதைப் போன்றே ஏற்றத்தாழ்வுகள் உண்டு. மன நிம்மதிக்கு ஒன்று பேஸ்புக் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுங்கள் அல்லது மேல் சொன்னவற்றை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

1 comments:

தருமி said...

//இன்றைய தேதிக்கு நமக்குத் தெரிந்த 4 பேரில் கட்டாயம் 3 பேர் அக்கவுண்ட் வைத்திருக்கிறார்கள்.//

அப்டியா ...?
சின்ன ஊர்களில் அப்டி இல்லையே!

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes