Wednesday, July 11, 2012

மத்திய தர மக்களை அவமதிக்கும் சிதம்பரம்

ரூ.15க்கு குடிதண்ணீரும், ரூ.20க்கு ஐஸ்க்ரீமும் வாங்கத் தயங்காத மத்திய தர மக்கள் அரிசி விலையை உயர்த்தினால் கூச்சலிடுகின்றனர் என்கிறார் செல்வச்சீமான் சிதம்பரம். 
மத்தியதர மக்கள் தினமும் 3 வேளை ஐஸ்க்ரீம்தான் சாப்பிடுகிறார்களா? குடிதண்ணீருக்காக 15 ரூபாயை செலவழிக்கிறோம் என்கிறார் வெட்கம் கெட்ட மத்திய அமைச்சர். சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னரும் மக்களின் அடிப்படைத்தேவையான சுத்தமான குடிநீரை வழங்க இயலாத கையாலாகாத அரசின் அங்கமான இவர் விலை உயர்வைப்பற்றி என்ன கவலைப்படப்போகிறார்? 30 சதவீதம் வரி செலுத்தும் இந்த மத்தியதரத்தின் பணம் எங்கே போகிறது? அந்த பணத்தைக்கொண்டு அரசு அவர்களுக்கு என்ன வசதி செய்து தரப்போகிறது? வளர்ந்த நாடுகளில், வரி செலுத்தும் மக்களுக்கு மருத்துவம் இலவசம், தரமான கல்வி இலவசம். இங்கே புழுத்த அரிசியும், குவார்ட்டரும் கோழி பிரியாணியும்தான் இலவசம்.

மத்திய தரத்தின் வருமானத்தில் 30 சதவீதத்தைப் பிடுங்கிக்கொள்ளுங்கள். மிச்ச 70 சதவீதத்தில் டாஸ்மாக் வளரட்டும். இன்னும் ஏதாவது மிச்சமிருந்தால் அரிசி வாங்கிக்கொள்ளட்டும் - 1 ரூபாயென்ன - எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக்கொள்ளுங்கள். போதாதற்கு அவர்களைக் கேவலமும் படுத்துங்கள்.  ஒரு நாளுக்கு ரூ.28 சம்பாதித்தால் அவன் ஏழை இல்லை , வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவன் என்று மான்டேக்சிங் அலுவாலியாவைக்கொண்டு அறிவியுங்கள்.ஏனென்றால் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் - இவர்கள் ரொம்ப நல்லவர்கள்.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes