Friday, November 15, 2013

ஆசிப் ப்ரதர்ஸின் அசத்தல் பிரியாணி

இந்த சனி, ஞாயிறில் தம்பிமார்கள் பாலாவும், கார்த்தியும் குடும்பத்துடன் பெங்களூரிலிருந்து எங்கள் வீட்டுக்கு வந்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை ஹோட்டலில் சாப்பிடுவோம் என்று முடிவாகியது. எங்கு சாப்பிடுவது என்ற பேச்சு கிளம்பியது. வாசு ஃபார்ச்சூன் அல்லது பார்பிக்யூ நேஷன் போவோம் என்றார். பாலாவுக்கு 2.30க்கு ட்ரெயின். அதனால் அவன் வீட்டிலிருந்து 1 மணிக்கு கிளம்ப வேண்டும். ஃபார்ச்சூன் எங்கள் வீட்டிலிருந்து கொஞ்சம் தூரம் அதிகம். 1 மணிக்குள் வீடு திரும்ப முடியாது. எனவே அந்த ஆப்ஷன் ட்ராப். அடுத்ததாக பார்பிக்யூ நேஷன். பேரைச் சொன்னவுடன் எங்கள் மகன் எக்சைட் ஆகிவிட்டான். டேபிளிலேயே இருக்கும் க்ரில், பச்சைக்கொடி, சிகப்புக்கொடி என்று அவர்கள் போடும் சீனுக்கு என் மகன் அடிமை ;). ஆனால் அவர்களின் டைமிங்ஸ் எங்களுக்கு செட்டாகவில்லை.
 ஆப்பக்கடைகள், செட்டிநாடு ஹோட்டல்களில் சாப்பிட மனதில் தெம்பில்லை. எனவே ஆசிப் ப்ரதர்ஸ் ஹோட்டலை நான் முன்மொழிந்தேன். கொடூரமாகப் பசித்த ஒரு மாலைப் பொழுதில், பிரியாணி டோர்டெலிவரிக்காக ஒரு பிரபல ஆப்பக்கடைக்குக் கால் செய்யப்போனேன். ஐய்யயோ அந்தக் கடை பிரியாணி நேத்து வச்ச புளிசோறு மாதிரி இருக்கு. எனக்கு வேண்டாம் என்று அலறினாள் என் மகள். மகனும் பலமாக அதை ஆமோதிக்க, கூகுளாண்டவரைச் சரணடைந்தேன் புது ரெஸ்ட்டாரண்ட் கண்டுபிடிக்க. அன்று துவங்கியது எங்கள் வீட்டுக்கு ஆசிப் பிரியாணியின் டோர்டெலிவரி. ஆனால் ஒருமுறைகூட நேரில் செல்லாததால் வாசு கொஞ்சம் தயங்கினார். குறைந்த விலை என்பது அவர் தயக்கத்திற்கான முதல் காரணம். அப்படி இப்படி பேசி சரிக்கட்டி ஒருவழியாகச் சென்றோம்.
மிகச்சாதாரணமான இருக்கைகள், உள் அலங்காரங்கள். பவர் ஆஃப் பாஸிட்டிவ் திங்க்கிங்கைப் பயன்படுத்தி, பாருங்களேன், ஏசி லாம் இருக்கு என்றேன். வாசு பார்த்த பார்வையில் கம்மென்று மெனு கார்டைப் பார்க்கத் திரும்பிவிட்டேன். தனியாக இருக்கும்போது நாம் செய்யத்தயங்கும் வேலைகளைக் கூட்டமாக இருக்கும்போது தாராளமாகச் செய்வோம். அப்படித்தான் வாசு ஸ்ட்டாட்டருக்கு ஆஃப்கன் சிக்கன் ஆர்டர் செய்தார். மேலும் சில்லி ப்ரான், க்ரில்டு சிக்கன் மற்றும் சிக்கன் லாலிபாப் ஆர்டர் செய்து கொண்டோம். மெயின் கோர்ஸுக்கு அவர்கள் கடையில் ஃபேமஸான பிரியாணி மற்றும் ப்ரான் மசாலா. 
முதலில் ஏகப்பட்ட சட்னிகளோடு ஆஃப்கன் சிக்கன் வந்த்து. சிக்கனுக்கு மேல் ஒரு வெண்ணிற லேயர். பார்ப்பதற்கு அவ்வளவு அப்பீலிங்காக இல்லை. வாசுவின் முழியே சரியில்லை. கொஞ்சம் டெரராகத்தான் இருந்தது. ஆளுக்கொரு துண்டை எடுத்து சாப்பிடத்துவங்கினோம். ஒரு கடி - அடேங்கப்பா அப்படியொரு சுவை.ஓரங்களில் லேசாகக் கருகி - அந்த வெண்ணிற லேயர், நன்கு அடிக்கப்பட்ட முட்டையின் வெள்ளைக்கரு. அது சிக்கனின் ருசிக்கு மேலும் சுவை கூட்டிற்று. சட்னியில் ஒரு முக்கு, ஒரு கடி - சுவையென்றால் அது தான் சுவை. க்ரில்டு சிக்கன் சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. சிக்கன் லாலிபாப்பைத் தோலோடு பொரிக்கிறார்கள். இது வேறு எந்த ரெஸ்ட்டாரண்ட்டிலும் இல்லாதது. இதனால் சிக்கன் வெளியே மொறுமொறுவென்றும் உள்ளே மிருதுவாகவும் இருக்கின்றது. மேலும் தோலினால், கொழுப்பு கொஞ்சம் சிக்கனிலேயே இருக்கிறது. இதுவும் அதன் அசாதாரண ருசிக்கு ஒரு காரணம். ஆனால் இவர்கள் இந்த தோல் டெக்னிக்கை ஓவராகப் பயன்படுத்தி, சூப்பிலும் தோலோடு போடுகின்றனர். அது சகிக்கவில்லை.
அடுத்து வந்தது அவர்களின் மாஸ்டர் பீஸ் பிரியாணி. மெலிதான, நீளமான பாசுமதி அரிசி, மிதமான மசாலா. ப்ரான் மிகச்சரியான பதத்தில் - வேகாமலும் இல்லை, ரப்பர் போலவும் இல்லை. அருமை.
இவை அனைத்திற்கும் 3000க்கும் குறைவான பில். நிறைவான வயிறு, மனதோடு வெளியேறினோம்.

Thursday, November 14, 2013

Asif Brothers' asathal biriyani

It was an anticipated weekend with both my brothers, Bala and Karthi, along with their wives turned up to our home for a week end bash all the way from Bangalore. My children were head over heels with the arrival of their mamas and athais. We planned for a brunch out as both my brothers were not ready to eat whatever I offered to cook.
Next came the part of deciding the restaurant.My husband suggested two places - Fortune or BBQ nation. Bala's return train was by 2.30. So he had to leave for the station by 1.30. This constraint was to be taken into consideration before choosing a restaurant. Fortune is a bit far away from our place. So rejected. BBQ nation is a major attraction for my son with all its grill over the table, green flag, red flag etc. But they start a bit late which means Bala could not leave on time for station.
 We were not ready for the monotonous Aappakadais, Chettinad restaurants. So I suggested Asif Biriyani centre. On a day of terrible hunger, we decided to order biriyani from our usual aappakadai near our place. But my daughter said that their biriyani tasted like yesterday's puli choru (Puliogare), which was immediately agreed by my son. So I went straight to googlaandavar which listed asif biriyani as a restaurant which would door-deliver to our area. Thus followed weeks and months of door delivery from Asif. But my husband was not sure of that place as we have never been there straight. His main reason for doubt is that their prices are very reasonable. I convinced him somehow and thus we three families landed in Asif Brothers' Biriyani Center.
The restaurant is not posh with very normal seatings and lightings. Atleast the place had a/cs. I tried to be optimistic and ventured saying 'Hey see, they have a/cs' here '. My husband gave me a plain stare. I turned back to the menu. When you are in a group you try to do things which you will never do when you are alone. Thus came vasu's (my husband) wild idea of ordering for afghan chicken for starters. Then we ordered for chilly prawn, grilled chicken and chicken lollipop. For soup, we chose chicken soup and hot n sour corn soup. For main course, we ordered what they are famous for - Biriyani and prawn masala.
First came the Afghan chicken with lots of accompaniments. There was a white layer over the chicken which was not much visually appealing which in turn made Vasu have a second thought about his choice. Each of us grabbed a piece. A bite into it - Wow........The taste just blew us away. That white layer is actually well beaten egg white spread over the chicken which added on to its taste. A dip into the chutney and a bite - it was divine. Grilled Chicken - not up to the mark. Then came the Chicken lollipop. Here they prepare the chicken lollipop with skin which I haven't tasted in any other restaurant. This makes the chicken crispy outside and moist inside. The slight fat content retained because of the covering skin enhances the flavour. But they stretch this idea a bit far and make chicken soup also with skin. This is a definite dampener.
Biriyani is a block-buster here. The thin, looong basmathi rice, the mild, not-so-overpowering masala, the texture - simply great. Prawn was cooked to perfection - not under-cooked also not rubbery. Finger licking good.
For all these, we paid less than 3 grand which was surprising. We left the pocket-friendly, tasty place with content. Try this place friends for a change!

Friday, November 8, 2013

தீபாவளி விற்பனை 334 கோடி

தீபாவளியை ஒட்டிய 3 நாட்களில் டாஸ்மாக்கின் விற்பனை 334 கோடியாம். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட இது பல மடங்கு அதிகமாம். 2002-2003ன் போது இருந்த டாஸ்மாக்கின் விற்பனை அளவு, கடந்த பத்து ஆண்டுகளில் பத்து மடங்கு அதிகரித்திருக்கிறது என்கிறது புள்ளி விவரம். பள்ளிச்சிறார்களும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்களாம்.

காலை 7 மணி போல் கல்லூரிக்குச் செல்லும் போது, நடைபாதைகளிலும், பேருந்து நிறுத்தங்களிலும் விழுந்து கிடக்கும் ஆண்களைப்பார்க்கும் போது, அவர்களின் மனைவியரும், பிள்ளைகளும் என்ன வேதனையில் இருப்போர்களோ என்ற நினைப்பு மனதை அழுத்துகிறது. மதியம் 3 மணியின் போதே இதே போன்ற காட்சிகளைக் காண முடியும். உழைக்க வேண்டிய வயதில், தன்னையும், குடும்பத்தையும், நாட்டையும் முன்னேற்ற வேண்டிய பருவத்தில் இப்படி குப்புறடித்துக்கிடக்கிறது தமிழ்ச்சமூகம்.

அன்று மதியம் 2.30 மணி இருக்கும். பேருந்தில், பெண்கள் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு 20 - 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை, ஒரு 40 வயது பெண்மணி எழுந்திருக்கச்சொன்னார். அவன், இது பெண்கள் இருக்கைதான். ஆனால் என்னால் நிற்க முடியவில்லை. என்ன செய்வது என்கிறான். நிற்கக்கூட முடியாத மிக ஆரோக்கியமான தலைமுறை உருவாகி வருகிறது. 1971 மதுவிலக்கை ரத்து செய்தார் கருணாநிதி. அன்று ஆரம்பித்தது வினை.

ஆனால் இந்நிலை மாறும். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி, சீனர்களின் மேல் தொடுத்த ஓப்பிய யுத்தத்தை ஒத்த யுத்தமொன்று தமிழ்நாட்டிலும் நடந்து கொண்டிருக்கிறது. எல்லாப்பிரச்சினைகளையும் மழுங்கடிக்க மது பயன்படுத்தப்படுகிறது. அனால் சீனர்கள் போல் நாமும் இம்மது மயக்கத்திலிருந்து தெளிந்து நிச்சயம் வெளிவருவோம்.

ராகுல் காந்திக்கு சேத்தன் பகத் கொடுக்கும் ஐடியா

சட்டமன்றத்தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில் பிரச்சாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸின் நட்சத்திரப்பேச்சாளராக ராகுல் காந்தி பிரமோட் செய்யப்படுகிறார். பாஜக சார்பாக நரேந்திரமோடி பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார். இப்பதிவில் எந்தக்கட்சி நல்ல கட்சி, யார் சிறப்பாகப் ஆட்சி செய்யப்போகிறார்கள் என்று ஆராயப்போவதில்லை. இது அரசியல் சார்ந்தது அல்ல. மாறாக, தலைவர்களின் லீடர்ஷிப், கரிஸ்மா, மேனரிசம் இவற்றைப்பற்றி இப்பதிவு பேசப்போகிறது.

ராகுல் காந்தியின் உரைகளை முன்பு கட்சிப்பிரமுகர்கள் தயார் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார்களாம். ஆனால் இப்போது தானாகவே தயார் செய்து கொள்கிறாராம். நரேந்திரமோடி மேடை மேடையாக உறுமிக்கொண்டிருக்கிறார். அவரது உரையின் முன், ராகுலின் `என் பாட்டி, என் அப்பா, என் தாயின் அழுகை` போன்ற பேச்சுகள் எடுபடவேயில்லை. சிங்கத்தின் முன் பூனை மியாவ் மியாவ் என்பது போல் இருக்கிறது. அவருடைய பாடி லாங்வேஜும் ஒரு தலைவனுக்கு உரியதாக இல்லை. சேத்தன் பகத் `ராகுல் இத்தனை முறை கைகளை மடக்குவதற்குப் பதிலாக அரைக்கைச்சட்டை போட்டுக்கொள்ளலாமே. காங்கிரஸ்காரர்கள் யாராவது இதை அவருக்குச்சொல்லுங்க` என்கிறார்.ராகுல் ஓயாமல் கைகளை மடித்துவிட்டுக்கொண்டே இருப்பது கவனக்கலைப்பாகவும், தன்னம்பிக்கை குறைவைக் காட்டுவதாகவும் இருக்கிறது. அதே நேரம் மோடி `பாயியோம், பெஹனோம்` என்று கூறுவதே ஒரு அறைக்கூவல் போலிருக்கிறது.

ஒரு சாதாரணக் குடிமகனின் மகன் அடிமட்டத்திலிருந்து கிளம்பி தளபதிகளையும், மந்திரிகளையும், ராஜகுருக்களையும் வீழ்த்தி அல்லது வசப்படுத்தி மன்னனை வென்று தான் மன்னனாவதற்கும் - சுகபோகத்தில் வளர்ந்த ஒரு ராஜகுமாரன் மன்னனாவதற்கும் உள்ள வேறுபாடு இது. ராகுல் என்னும் அரசியல் குழந்தையால், மோடி என்னும் அரசியல் மன்னனுக்கு எந்த விதத்திலும் டஃப் கொடுக்க முடியாது. காங்கிரஸ் ராகுலை வைத்து காமெடி பண்ணுவதை நிறுத்திக்கொள்ளலாம்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes