Thursday, August 10, 2017

டார்க் டூரிஸம்

முன்னாடிலாம் வீட்லருந்து டூர் போனா திருச்செந்தூர் or மதுர அழகர்கோவில் or மலைக்கோட்டை, அதோட சேத்து முக்கொம்பு or குற்றாலம், கொஞ்சம் பெரிய டூர்னா ஊட்டி, கொடைக்கானல். அவ்ளோதான்.

இப்ப டூர்ஸ் லெவலே வேற - ரிலிஜஸ் டூர் பேக்கேஜஸ், ஈகோ டூரிஸம் - அங்கயே டென்ட் அடிச்சு தங்குறது (ஒரு ஊர்ல வெட்டவெளில - சுத்தி மரம், ஆறு இருக்கு- ரெண்டு கட்டில் போட்டு வச்சு இருக்காய்ங்க- அங்க தங்குறதுக்கு 220 யூரோ per nightஆம். நம்ம மொட்டமாடி கூட நல்லாத்தான் இருக்கு), அட்வன்ச்சர் டூரிஸம், ஃபுட் டூர், டார்க் டூரிஸம்.

இதில் டார்க் டூரிஸம் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த (பெரும்பாலும் நெகட்டிவ் ரீசன்ஸ் - war, poverty, genocides- இவை போல) இடங்களுக்குச் செல்வது. நம் இந்தியாவைப்பொருத்த வரையில் ஜாலியன் வாலாபாக், அந்தமான் செல்லூலார் ஜெயில், போபால் விஷ வாயுவினால் மக்கள் உயிரிழந்த இடம் ஆகியவை டார்க் டூரிஸ் ட்ஸ்பாட்கள் ஆகும். இப்போது இந்தியர்கள் இலங்கைக்கு இவ்வகை டூரிஸத்தில் அதிகம் செல்கிறார்கள். LTTEயினரின் bunker,  spots where millions of civilians were killed. என்னால் இலங்கைக்கு ஒரு போதும் செல்லமுடியாது. அவ்வளவு மனோபலம் என்னிடம் நிச்சயமாக இல்லை. I wonder how Tamils can visit these places without any emotions whatsoever.

இங்கே ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் பற்றிய ஒரு செய்தியைக் குறிப்பிட்டாக வேண்டும். டார்க் டூரிஸம் ஸ்பாட்டுகளில் உலகளவில் முக்கியமானது  concentration camps. இந்தக் கேம்புகளில் பல மில்லியன் யூதர்கள் மிகக்கொடுமையான முறையில் கொல்லப்பட்டார்கள். Poland, Auschwitz, holocaust museum ஆகியவையும் இவற்றில் அடங்கும். 

ஸ்பீல்பெர்க் ஒரு யூதர். அவர்  Schindler's Ark என்ற நாவலின் அடிப்படையில் Schindler's list என்ற ஒரு அருமையான படத்தை இயக்கினார். இத்திரைப்படம் 7 ஆஸ்கர் அவார்டுகளை வென்றது (12 nominations).அந்த நாவல் கான்சன்ட்ரேஷன் கேம்ப்பிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிரோடு திரும்பிய ஒருவரின் அனுபவங்கள். கற்பனையல்ல. ஸ்பீல்பெர்க் இந்தப்படத்தை இயக்கிய அனுபவத்தைப் பற்றி பேசும்போது - it was emotionally draining. I was frightened - என்கிறார். 20ம் நூற்றாண்டில் இப்படியெல்லாம் நடக்குமா என்று வியந்திருக்கிறார். 

அதை விட மோசமாக 21ம் நூற்றாண்டில் நடந்தேறியிருக்கிறது. நாமும் சுற்றுலா செல்கிறோம்.

Wednesday, August 9, 2017

என் மனைவிக்கு அருகே என்னைப் புதைக்காதீர்கள் - டென்மார்க் இளவரசர்

டென்மார்க் இளவரசர் ஹென்ரிக், என் மறைவிற்குப் பின் என் மனைவிக்கு அருகே என்னைப் புதைக்க வேண்டாம் என்று கூறியிருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 1967ம் ஆண்டு இளவரசி மார்கரெட்டும், ஹென்ரிக்கும் மணம் புரிந்து கொண்டனர். 1972ம் ஆண்டு இளவரசி மார்கரெட் அரியணை ஏறினார், அரசியானார். ஹென்ரிக்கும் தான் மன்னர் என்று அறியப்படவேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தார். ஆனால் அவர்கள் நாட்டின் முறைப்படி Prince Consort என்ற பட்டத்தைத்தான் தர முடியும், King Consort அல்ல என்று தெரிவித்துவிட்டார் அரசி (இங்கிலாந்திலும் இன்று வரை ராணி எலிசபெத், இளவரசர் ஃபிலிப் தான் - மன்னர் அல்ல). அதனால் இருவருக்கும் இவ்விஷயத்தில் அன்றிலிருந்தே புகைச்சல்தான் என்கின்றனர். அதன் உச்சமாக இளவரசர் முதலில் சொன்னவாறு தெரிவித்துள்ளார்.

மனைவி தன்னை விட உயர்ந்த பதவியிலோ, ஃபேமஸாகவோ இருப்பது எப்போதும் ஆண்களுக்குத் தாங்கிக்கொள்ள கடினமாகவே இருக்கிறது. இளவரசி டயானா 1995 BBC பேட்டியில் சொல்கிறார் - "We'd be going round Australia, for instance, and all you could hear was, oh, she's on the other side. Now, if you're a man, like my husband a proud man, you mind about that if you hear it every day for four weeks. And you feel low about it, instead of feeling happy and sharing it." சார்லஸ், டயானா திருமண failureக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

நம்ம சூரியகாந்தி திரைப்படத்தில், ‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது’ பாட்டில் - நான் நிழலைப் போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே - என்று ஹீரோ பாடுகிறார் ஹீரோயினைப் பார்த்து, that is, wife got a promotion, salary hike and the husband is feeling bad about it.

ஒரு சராசரி ஆண்மகனின் மனநிலை, தன் மனைவி எல்லா விதத்திலும் ஒரு படி குறைந்தவளாக இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் நாம் ஒரு யுக சந்தியில் இருக்கிறோம். போன தலைமுறை - அப்பா சம்பாதித்துக் காசு கொண்டு வந்து தருவார், அம்மா சமைப்பாங்க - அவ்வளவுதான். இப்போது trend வேறு. முழுவதும் அந்தப்பக்கமும் இல்லை, இந்தப்பக்கமும் இல்லை. அதனால் தான் இன்னும் மாமியார்கள் மகன்களிடம் என்னடா காய் வெட்டிக்கிட்டு இருக்குற என்று எரிச்சல்படுபவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் நம் அடுத்த தலைமுறை திரிசங்கு சொர்க்கமாக இல்லாமல் முழுமையான ஒரு மாற்றத்தை அடைந்து விடுவார்கள். ஆண், பெண் சமத்துவம் என்று பேசப்பட்டு வருகிற ஒரு விஷயம் முழுமைப்பட்டுவிடும் என்றே நம்புகிறோம்.

Monday, August 7, 2017

லீவுக்கு எங்க போகலாம்

இந்த மாதம் லாங் வீக் எண்ட் 2,3 வருகிறது. Trip advisor, trivago எல்லா siteகளிலும் ஆஃபர் மழை பொழிந்துகொண்டிருக்கிறது. பத்தாததற்கு SOTC, Mahindra holidays என்று package offer பண்ணும் நிறுவனங்கள் ஜஸ்ட் 2 லட்ச ரூபாயில் ஐரோப்பாவின் லண்டன் பாரீஸ் என்ற விளம்பரங்கள். நம் பிள்ளைகள் பக்கத்து வீட்டு அனந்த் சம்மர் லீவுக்கு சைப்ரஸ் போறாங்க (எங்கய்யா இருக்கு இந்த சைப்ரஸ்). பிஸினஸ் க்ளாஸ்ல போறாங்களா-அதனால அவங்கள பிக்கப் பண்ண ஆடி கார் வந்துச்சு. நம்மளும் ஒரு தடவயாவது பிஸினஸ் க்ளாஸ்ல போகணும். (டேய் உன் வயசுல நான் ஏரோப்ளேன் பாத்தது கூட இல்லடா. கருடா கருடா பூப்போடுன்னு பருந்து பின்னாடி அண்ணாந்து பாத்துக்கிட்டே ஓடியிருக்கோம். அவ்வளவுதான்). துபாய், தாய்லாந்து, மொரிஷியஸ் அடேங்கப்பா. அட்வன்ச்சர் டூரிஸம், டார்க் டூரிஸம் etc etc.

டூர் போயே ஆக வேண்டும். இந்த சோஷல் மீடியாக்கள் வருகைக்குப்பின் டூர் போவது ஒரு கட்டாயம். Travelling to NJ from Mumbai airport என்று fb ஸ்டேட்டஸ் போடுவதில் ஆரம்பித்து, checked in at ……., sipping coffee in the snow, enjoying local delicacies என்று status போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அந்த local delicacy உங்கள் டேஸ்ட்டுக்கு செட்டே ஆகாவிட்டாலும் பரவாயில்லை, வயிறு பிரச்சனை பண்ணினாலும் பரவாயில்லை. அதுவா முக்கியம். ஃபோட்டோ அழகாக இருக்க வேண்டும். லைக்குகள் குவிய வேண்டும். அட்வென்ச்சர் டூர் என்று பலூனில் பறந்து, பங்கி ஜம்ப் பண்ணி ஸ்ஸ்ஸ்ஸஸஸஸப்ப்ப்பாஆஆஆஆ கண்ணக்கட்டிருச்சு.

அடுத்த வீட்டு ஆன்ட்டி சி4ல லீவுக்கு சிங்கப்பூருக்கு இன்னிக்கு போறாங்க. நீங்க எங்கயாவது போறீங்களா அப்டின்னு கேட்டாங்க. ஆமா போறோம். எங்க அப்படினாங்க. எங்க ஊருக்கு. ஒங்க ஊரா ன்னு கேக்கும் போது அவங்க expression அ பாக்கணுமே. ஊருக்குப்போறது இவ்ளோ கேவலமா எப்ப மாறுச்சுன்னு I was wondering. ஒரு காலத்துல லீவ் விட்டா சொந்த ஊருக்குப் போவோம். அங்க செய்றதுக்கும் பெருசா ஒண்ணும் இருக்காது. சும்மா we will be unwinding. That’s it. No pressure to jump from somewhere, eat some atrocious dishes. இல்லன்னா ஒரு vanல எல்லாரையும் அடச்சு கோயிலுக்குக் கூட்டிட்டுப்போவாங்க. முடிஞ்சது லீவு.


இப்பலாம் லீவே pressure தான். Pressure to prove something. பாவம் இவர்கள்.

Friday, August 4, 2017

கால சர்ப்பதோஷத்திலிருந்து எந்த வயதில் விடுபடலாம்?

கால சர்ப்ப தோஷம் உடையவர்கள் தங்கள் வாழ்வின் முதல் பாதியில் பல இன்னல்களுக்கு ஆளாவார்கள் - பொருளாதாரத் தடை, தொழிலில் முன்னேற்றமின்மை, பெர்சனல் வாழ்விலும் பல இடர்ப்பாடுகள், தோல்விகள், மனவருத்தங்கள்.... உதாரணமாக பாக்யராஜ், இளையராஜா இவர்களின் ஜாதகங்களைக் குறிப்பிடலாம். 

இளையராஜா ஆரம்ப நாட்களில் கிராமத் திருவிழாக்களிலும், நாடகங்களிலும் மிகச் சொற்ப சம்பளத்திற்கு வாசித்துக்கொண்டிருந்தார் என்பதெல்லாம் நாம் அறிந்ததே. அதே போல்தான் பாக்யராஜும்.  ஒரு பிரேக் கிடைப்பதற்கு முன் மிகவும் சிரமப்பட்டே முன்னுக்கு வந்திருக்கிறார். முதல் மனைவி மறைவும் இத்துன்பங்களில் அடக்கிக்கொள்ளலாம். அவர்களின் பிற்பாதி வாழ்க்கையில் அவர்கள் அடைந்த உயரங்கள் நாம் அனைவரும் அறிந்ததே.

என்ன தான் 30 வயதைக் கடந்து விட்டாலும் காலசர்ப்ப தோஷமுடைய வரனுக்குப் பெண் கொடுக்க பெற்றோர் இன்றும் தயங்குகின்றனர். என் நெருங்கிய உறவின்ர் ஒருவரின் பெண்ணுக்கு டாக்டர் வரன் வந்தது. பையன் காலசர்ப்ப ஜாதகம் உடையவன். எனவே உறவினர் மிகவும் தயங்கி பெண் தர மறுத்துவிட்டார். நான் அதான் முப்பது தாண்டியாச்சுல்ல, இனிமே life சூப்பரா தான் இருக்கும். ஏன் refuse பண்றீங்க என்று கேட்டேன். இல்லம்மா என்னதான் 30 தாண்டினாலும் காலம் முழுக்க அந்த effect இருக்கத் தான் செய்யும் என்றார்.

ஜோதிடரீதியாக இவர் சொல்வது தவறு என்று உதாரணங்களோடு வாதிட முடியும். ஆனாலும் உளவியல் ரீதியாக இவர் சொல்வது சரியே. இளவயதில் அனுபவிக்கும் துன்பம், வாழ்நாள் முழுவதிற்குமான ஒரு வடுவை ஏற்படுத்திவிட்டே செல்கிறது. 

உதாரணமாக, ஒரு abusive environmentல் வளரும் குழந்தைக்கு normal family எப்படி இருக்கும் என்று தெரியாது. அக்குழந்தையைப் பொறுத்தவரை அப்பா, அம்மான்னா அடிப்பாங்க என்றுதான் தெரிந்திருக்கும். தான் ஒரு நல்ல பொறுப்பான குடும்பத்தலைவனாகவோ/தலைவியாகவோ ஆகி, தன் பிள்ளைக்கு ஒரு நல்ல குடும்பச்சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும் பொழுதுதான், தான் தவற விட்டது எது என்பதை அவர்கள் அறிகிறார்கள். ஓ, அப்பா இப்படிலாம் கூட பிள்ளயோட விளையாடலாமா. அம்மா இவ்ளோ happyஆ இருக்கமுடியுமா என்றெல்லாம் தெரியவரும்போது, தான் miss பண்ண ஒவ்வொரு விஷயமும் விஸ்வரூபமெடுக்கிறது. ஒரு விதமான மனக்கஷ்டத்தை ஏற்படுத்தவே செய்கிறது. (மன வளப் பயிற்சிகளால் வெளியே வர முயற்ச்சிக்கலாம் என்றாலும் கூட)

கொடிது, கொடிது இளமையில் வறுமை என்று பாடினார் அவ்வை. இளமையில் அனுபவிக்கும் எவ்விதத் துன்பமும் கொடுமையே. ஏனெனில் ஒரு வாழ்நாளிற்கான காயங்களை ஏற்படுத்திவிட்டே அவை மறைகின்றன.

Wednesday, July 26, 2017

தாயாரின் மறைவிற்கு அழாத பிரிட்டிஷ் இளவரசர்கள்

மறைந்த  பிரிட்டிஷ் இளவரசியின் இருபதாம் நினைவு நாள் ஆகஸ்ட்டில். இளவரசர்கள் வில்லியம், ஹாரி தங்கள் தாயார் பற்றிய பெர்சனலான நினைவுகளை முதன்முறையாக ஒரு தொலைக்காட்சி சானலில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இளவரசர் ஹாரி இதுவரை இருமுறை மட்டுமே தன் தாயாரின் மறைவுக்காக அழுதுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 20 வருட துக்கம் இன்னும் எக்கச்சக்கம் மீதமிருக்கிறது என்கிறார். Coincidental ஆக  ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கமலஹாசன் தன் தாயார், தகப்பனாரின் மறைவின் போதோ அல்லது மிகச்சமீபமாக அவர் சகோதர்ரின் மறைவின் போதோ வாய் விட்டு அழுததெல்லாம் இல்லை. மாறாக சம்மந்தமேயில்லாமல் ஒரு சூரிய உதயத்தைப் பார்க்கும்போது அழுகை பீறிட்டுக்கிளம்பியது என்கிறார்.

யோசித்துப்பார்க்கும் பொழுது, இன்று வரை என் தகப்பனாரின் மறைவுக்கு நான் அழுததே இல்லை. அவர் மறைந்த போது என் வயது எட்டு. ஏன் அழவில்லை - சத்தியமாகத் தெரியவில்லை. மிச்ச வாழ்க்கையைத் தகப்பனில்லாமல் எதிர்கொள்ள வேண்டும் என்ற மகா திகில் முன் அழுகை வரவில்லையோ???

வாழ்வின் தவிர்க்கமுடியாத ஒரு அங்கம் untimelyயாகப் பிடுங்கிக்கொள்ளப்படும்போது எஞ்சுவது ஒரு மிகப்பெரிய ஷாக் மட்டுமே. புலன்கள் செயலிழந்து விடுகின்றன. என்று அந்த வலியும், ஷாக்கும் குறைகிறதோ அன்று தான் அதற்காக அழ முடியும். 

ஒரு மறைவிற்கு உங்களால் அழ முடிந்தால் நீங்கள் பாக்கியவான்கள். Vent out பண்ண முடியவில்லையென்றால் you are yet to overcome the shock. Before falling into depression, psychological help எடுத்துக்கொள்ளலாம் தவறில்லை. இளவரசர் ஹாரி செய்ததும் அதைத்தான்.

Friday, January 6, 2017

என்ன தான் இருக்கிறது 9ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் நாடார்களைப் பற்றி

சிபிஎஸ்இ சமூக அறிவியல் ஒன்பதாம் வகுப்புப்பாடப்புத்தகத்திலிருந்து சில பகுதிகளை நீக்க வேண்டுமென்று கோரிக்கைகள் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டு தற்சமயம் அப்பகுதிகளை நீக்கி கல்வித்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, அப்பகுதிகளை வகுப்பறையில் நடத்தக்கூடாதென்றும் மேலும் அப்பகுதியிலிருந்து பரிட்சையில் கேள்விகள் கேட்கக் கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஒரு விஷயத்தைக்குறித்து யாராவது போராடும்போதுதான் (அது எவ்வளவு சாதாரணமாக விஷயமாக இருந்தபோதிலும்) பலரின் கவனத்தை அது திருப்புகிறது. என்ன தான் இருக்கிறது அதில் என்ற ஆர்வக்கோளாறில் அதைப் படித்தோம். 

இது தான் பாடப்புத்தகத்தில் இருக்கிறது - 1800களில் சாணார் என்றழைக்கப்பட்ட நாடார் குலப்பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்கும் வகையில் ஆடை அணிவது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தடை செய்யப்பட்டிருந்தது. உயர்குலத்தவரான நாயர் பெண்கள் மட்டுமே மேல்முண்டு அணிய அனுமதி. இச்சட்டத்தை எதிர்த்து 1822 முதல் 1859 வரையான காலங்களில் கடுமையாகப் போராடி, மேலாடை அணிவது எங்கள் உரிமை என்று நிறுவினர் நாடார் சமூகத்தினர். இப்போராட்டத்தில் ஆங்கிலேயர்களின் பங்கு மகத்தானது. பிரிட்டிஷ் மகாராணி இச்சட்டத்தைக் காட்டுமிராண்டித்தனமானது என்று கூறி கடுமையாகக் கண்டித்தார். வேறு வழியின்றி திருவிதாங்கூர் மன்னர் அனைத்து நாடார் பெண்களும் குப்பாயம் என்ற மேலாடை அணியலாம் என்ற உரிமை அளித்தார்.

பாடப்புத்தகத்தில் இப்பகுதியைத் தடை செய்வதற்கு சில காரணங்களை முன்வைக்கின்றனர் அரசியல்கட்சிகளைச் சார்ந்தோர் மற்றும் சில நாடார் அமைப்புகள். அந்தத் திருத்தங்களை வேண்டுமானால் செய்யலாமே தவிர, நீக்க வேண்டியதன் அவசியமென்ன?

நாடார் சமூகம், மேலாடை அணியக்கூட உரிமையில்லை என்று அசிங்கப்படுத்தப்பட்டும், அடக்கப்பட்டும், தடை பல தாண்டி முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள் என்று வீறு கொண்டெழுந்தது. தான் கால் வைத்த அத்தனை துறைகளிலும் சாதனை படைத்து வருகிறது.  கடின உழைப்பே முன்னேற்றத்துக்கு அடிப்படை என்று நிரூபிக்கிறது. இன்றும் நம் தெருவில் சிறிய கடை வைத்திருந்த அண்ணாச்சி, அதே இடத்தில் நாளடைவில் சூப்பர் மார்க்கெட் கட்டி விரிவடைகின்றார் என்றால் அது கடின உழைப்பில்லாமல் வேறென்ன?    ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு நம்பிக்கைக் கீற்றைத் தருவதல்லவா இது போன்ற உழைப்பு?

சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்ததுதான் ஃபீனிக்ஸிற்கான பெருமை. தான் சாம்பலிலிருந்துதான் உயர்ந்தோம் என்று உலகிற்குத் தெரிவிப்பதில் என்ன அசிங்கம்? முன்னேறிச் செல்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அவசியம் நாம் எங்கிருந்து வந்தோம் என்பதைத் தெரிந்து கொள்வதும், தெரிவித்துக்கொள்வதும். என் வேர்களை வெளிப்படுத்திக்கொள்வதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை. மாறாக என் முன்னோர்களைக் குறித்து நான் அளவில்லாப் பெருமையும், கர்வமும் கொள்கிறேன்.

முடிவாக - வரலாறு மிக முக்கியம் அமைச்சரே :)

Annex:

“… As it is not reasonable on the part of the Shanar women to wear cloths over their breasts, such custom being prohibited, they are required to abstain in future from covering the upper part of their body. An order (circular) had been issued on the 7th Edavam 989, to all places prohibiting the Shanar women of the families of such Sanars as may have embraced Christianity from wearing cloths, over their breasts, and requiring them to substitute for these the Kuppayam (a kind of short bodice used by their Christians and by Mohamadan native females) but with regard to their (the Shanars) allegation as an authority for wearing clothes over their breasts, that a decree has been passed subsequently by a law court, permitting the Shanar women on the contrary the use of clothes on the upper part of their body. Such a decision since if it be admitted as establishing a rule, it would be a direct contravention of the order alluded to, cannot but be considered as invalid. Therefore the order referred to is hereby republished to be held as a document (or authority) in their respect”
-C.M. Augur – Church, History of Travancore – 1902 – Appendix XVIII – Page vii

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes